உத்திரபிரதேசத்தில் ஒரு தனியார் பள்ளி முதல்வர் மாணவர்களிடம் பொதுத்தேர்வு குறித்து கொடுத்த அறிவுரை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் அவர் கைதும் செய்யப்பட்டு உள்ளார்.
எதற்கும் பயப்பட தேவையில்லை..!
உத்திரபிரதேச மாநிலத்தில் மாவே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அப்பள்ளி முதல்வர், என்னுடைய பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட பொதுத்தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள் என நான் உறுதி அளிக்கிறேன் என்றார்.
அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடம் நீங்கள் எதுக்கும் பயப்படாதீங்க, கேள்விக்கு விடை தெரியலனா பேப்பருக்கு அடியில 100 ரூபாய் வச்சுட்டு வாங்க மார்க் கிடைக்கும் என்றார். மேலும் தேர்வுக் கண்காணிப்புக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் எனது நண்பர்கள் தான் என பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10ம் வகுப்பு வினாத்தாளை டிக் டாக்கில் வெளியிட்ட மாணவன் – அள்ளியது போலீஸ்!!
100 ரூபாய் வைத்து விட்டு வந்தால் மார்க் தானாக வரும், மாட்டிக்கொண்டால் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஜெயபாரத்!! என பேசிய வீடியோ வெளியானதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |