மேற்கு வங்கத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் வேளையில் ஆங்கிலத் தேர்வு வினாத்தாளை பள்ளி மாணவன் ஒருவன் டிக் டாக்கில் வெளியிட்டதால் போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.
தேர்வு நடைபெறும் போதே..!
மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பிற்கான ஆங்கில தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது தேர்வு நடைபெறும் போதே வினாத்தாள் டிக் டாக்கில் வெளியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அங்குள்ள மால்டா மாவட்டத்தில் பைத்தியநாத்பூர் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய ஒரு மாணவன் தான் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.
இதனால் அந்த மாணவனை கைது செய்த போலீசார் தேர்வறைக்குள் எவ்வாறு மொபைல் போன் எடுத்துச் சென்றான், அறைக் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு கவனிக்கத் தவறினர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவருக்கு 16 வயது என்பதால் அவர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |