தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, மத கூட்டங்களுக்கு தடை – முதல்வர் ஈபிஎஸ்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நேரம் குறைப்பு:

தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை என குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மதியம் 2.30 வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் ஆன்லைன் விற்பனை முடக்கம் – மக்களைக் காப்பாற்றிய மளிகை கடைகள்..!

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு – 3 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

மேலும் கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here