இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அளவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இனி பட்டனை தட்டினால் எல்லாமே வீட்டுக்கு வந்துவிடும் என மக்கள் அனைவரும் நினைத்திருந்த நிலையில் கொரோனா அனைத்தையும் உடைத்துள்ளது.
கொரோனாவால் முடங்கிய ஆன்லைன் விற்பனை..!
இந்தியாவை முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக விநியோக சந்தை பாதிப்படைந்த நிலையில் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதை விட மொத்தமாக முடங்கியுள்ளது என்றாலும் மிகையில்லை. குறிப்பாக நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வந்த அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் இதனால் முடங்கியுள்ளது.
பிரச்சனை..!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டில் ஈகாமர்ஸ் சந்தையின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும் நாட்டை இயங்க வைப்பது இந்தச் சின்னச் சின்ன மளிகைக் கடைகளும், ரீடைல் கடைகளும் தான். ஆனால் ஈகாமர்ஸ் வந்த பின்பு இக்கடைகளின் மதிப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் குறைந்துள்ளது என்றால் மிகையில்லை. ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி அடைவது இல்லை ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன மாற்றம் தான் தவறு.
கொரோனா பாதிப்பின் காரணமாக மளிகை மற்றும் உணவு பொருட்களின் வர்த்தகத்திற்கும் சந்தைக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கணிசமான பாதிப்பு இருக்கிறது. ஆனால் உணவுக்குப் பின் மக்கள் அதிகமாகச் செலவு செய்யும் ஆடைக்கு விற்பனை துறைக்குத் தான் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |