தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு – 5 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் இருவர் கொரோனா வைரஸால் உயிர் இழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக 86 பேருக்கு கொரோனா:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சோதனை முடிவில் 86 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும் தேனியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மூச்சு திணறலால் உயிர் இழந்து உள்ளார். தற்போது அவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.

  • தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை – 90,824 பேர்
  • கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் – 571(இதில் 507 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்).
  • 28 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்து வீடு திரும்பியவர்கள் – 5,315 பேர்
  • சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை – 4,448 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here