மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா – விளக்கேற்றி அசத்திய பிரபலங்கள்..!

0

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையுடன் பல பிரபலங்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும் டார்ச் அடித்தும் ஆதரவு அளித்துள்ளனர்.

ரஜினி..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினியுடன் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி கொரோனாவுக்கு எதிரான தங்கள் போராட்டத்தையும், பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

அக்‌ஷய் குமார்..!

எந்த அளவுக்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோமே, அந்த அளவுக்கு இந்த கொரோனா இருளில் இருந்து நாம் மீண்டு வருவோம், பத்திரமாக இருங்கள், ஒற்றுமையுடன் இருப்போம், அது தான் நமது பலம் என பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் விளக்கேற்றி பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

சூரி..!

கொரோனாவால் இருட்டில் மூழ்கியிருக்கும் உலகத்தை ஒற்றுமை என்னும் வெளிச்சத்தால் விரட்டி அடிப்போம் ஜெய்ஹிந்த் என குழந்தைகளுடன் வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி காமெடி நடிகர் சூரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன்..!

அல்லு அர்ஜுன் அவரது குடும்பத்துடன் ஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு..!

மகேஷ் பாபு தனது வீட்டில் உள்ள மின் விளக்குகளை சரியாக 9 மணிக்கு அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி 9 நிமிடங்கள் தேசத்தின் ஒற்றுமையை காக்க நின்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஷி கண்ணா..!

கொரோனாவுக்கு எதிராக போராடும் உறுதி வாய்ந்த நெஞ்சங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நேரத்தில் விளக்கேற்றுகிறேன் என நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தனது வீட்டில் அடுக்கடுக்காக விளக்குகளையும் மெழுகுவர்த்தியும் ஏற்றியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here