தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் – 1173 பேர்
- இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 11 பேர்
- கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 58 பேர்
தமிழகத்தில் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 126, திண்டுக்கலில் 56, ஈரோட்டில் 64, மதுரையில் 39, கரூரில் 40, நெல்லையில் 56, நாமக்கலில் 45, திருப்பூரில் 78, நாகையில் 29, கன்னியாகுமரியில் 15, திருச்சியில் 43 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |