பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. மேலும் இது இந்த கொரோனா பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பலரும் தங்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்காமல் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
அமெரிக்கா, சிறப்பு விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதிலும், அவர்கள் இந்தியாவில் இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். உலகத்திலேயே அமெரிக்காதான், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேரை பலி கொடுத்துள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான், இப்பிரச்சினையை சிறப்பாக சமாளித்து வரக்கூடிய இந்தியாவிலேயே இருந்து விடுவதுதான், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு என்ற நினைப்புக்கு அமெரிக்கர்கள் வந்துவிட்டனர்.
தாராவி
எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுதான் செல்லும்.. அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் இந்த வைரஸும் தாராவியை பாதித்துள்ளது.. நெரிசல் மிக்க பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறிதான்.. கொரோனா பரவ தொடங்கியது என்றதுமே அரசு முதலில் கவனம் செலுத்தியது தாராவியில்தான்.. அதனால்தான் பலி எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
பலி எண்ணிக்கை
55 வயதான நபர் ஒருவர்தான் முதல் பலி.. ஆனால் இவருக்கு தொற்று எங்கு, எப்படி, எதன்மூலம் பரவியது என்பது தெரியவில்லை. 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிர்பலியை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. போதுமான பயம் இன்னும் வரவில்லை என்கிறார்கள், நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறாம்.
கழிவறை
இது எல்லாவற்றிற்கும் மேலாக தாராவி பற்றின கவலை என்னவென்றால், இங்கு பொதுக்கழிப்பறை நிறைய பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட 600 பேருக்கு ஒரே பாத்ரூம்தானாம்.. இந்த பொதுக்கழிப்பறை மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது..
பாத்ரூமில் பக்கெட்கள், கைப்பிடிகள், கதவுகளில் வைரஸ் தொற்று இருக்கும் என்கிறார்கள்.. அதனால் கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். லட்சணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் வீடு வீடாக சென்று டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரம்
இப்போதைக்கு மெடிக்கல்ஷாப் தவிர மற்ற எல்லா கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியாவது அங்குள்ள தமிழர்கள் அனைவருமே நலன் பெற வேண்டும் என்றும், அதற்கான சுகாதார, மற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. எனினும் நெருக்கமான வீடுகள், குறைவான சுகாதாரம், ஏராளமான பாதிப்புகளில் சிக்கி திணறி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |