தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த 2 வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,191
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 87 (0.70%)
  • இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 3,60,068
  • அங்கீகரிக்கப்பட்ட கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை – 63
  • தற்போது கொரோனவால் சிகிச்சை பெறுபவர்கள் – 7,219 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,882 (47.30%) ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 557 பேருக்கு, செங்கல்பட்டில் 58 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 8,228 பேர்
  • கோவை – 146 பேர்
  • திருப்பூர் – 114 பேர்
  • திண்டுக்கல் – 127 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • நெல்லை – 242 பேர்
  • செங்கல்பட்டு – 621 பேர்
  • நாமக்கல் – 77 பேர்
  • திருச்சி – 68 பேர்
  • திருவள்ளூர் – 594 பேர்
  • மதுரை – 172 பேர்
  • தேனி – 92 பேர்
  • விழுப்புரம் – 318 பேர்
  • கடலூர் – 420 பேர்
  • அரியலூர் – 315 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here