இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இன்று வரை 1,12,359 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3,435 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 3,002 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,390 பேர் உயிரிழந்து உள்ளனர்.
டாப் 4 கொரோனா பாதித்த மாநிலங்கள்:
- மஹாராஷ்டிரா – 39,297 பேர்
- தமிழ்நாடு – 13,191 பேர்
- குஜராத் – 12,537 பேர்
- டெல்லி – 11,088 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |