தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி – சென்னையில் 1000ஐ தாண்டிய பாதிப்பு..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 203 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளது. இன்று சென்னையில் 96 வயது முதியவர் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2526 பேர்
  • இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 28 பேர் (1.10%)
  • இன்று சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 9,165

தமிழகத்தில் இன்று 54 மட்டும் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1312 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகம் பாதுகாப்பு வளையத்தில் தான் இன்னும் உள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகளவில் சோதனைகள் (14%) நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 176 பேருக்கும், செங்கல்பட்டில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 6 பேருக்கும், மதுரையில் 3 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சையில் தலா 2 பேருக்கும், அரியலூர், திண்டுக்கல், கடலூர், கரூர், நாகை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவருக்கும் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 1082 பேர்
  • கோவை – 141 பேர்
  • திருப்பூர் – 112 பேர்
  • திண்டுக்கல் – 81 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • மதுரை – 87 பேர்
  • நெல்லை – 63 பேர்
  • செங்கல்பட்டு – 86 பேர்
  • நாமக்கல் – 59 பேர்
  • திருச்சி – 51 பேர்
  • திருவள்ளூர் – 61 பேர்
  • தேனி – 43 பேர்
  • நாகை – 45 பேர்
  • கரூர் – 43 பேர்
  • ராணிப்பேட்டை – 40 பேர்
  • கள்ளக்குறிச்சி – 9 பேர்
  • தென்காசி – 48 பேர்
  • திருவண்ணாமலை – 15 பேர்
  • கன்னியாகுமரி – 16 பேர்
  • தஞ்சாவூர் – 57 பேர்
  • காஞ்சிபுரம் – 28 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here