இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் அவர்களின் பொழுதை போக்கும் வகையில் பழைய மற்றும் பிரபல தொடர்களை தூர்தர்சன் சேனல் மறுஒளிபரப்பு செய்தது. அவ்வாறு ராமாயணம் தொடர் இந்த மறுஒளிபரப்பில் ஏப்ரல் 16ம் தேதி 7.7 கோடி பார்வையாளர்களை கடந்த உலக சாதனை படைத்துள்ளது.
33 ஆண்டுகளுக்கு பிறகு..!
ராமானந்த் சாகர் எழுதி, தயாரித்து, இயக்கிய ராமாயணம் தொடர் 1987ம் ஆண்டு முதன் முதலில் ஒளிபரப்பாகி இந்திய மக்களை பெரிதளவில் கவர்ந்து அனைவரையும் டிவி முன்பு கட்டிப்போட்டது. அதற்கடுத்து 33 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடர் தூர்தர்சனில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பட்டது.
இதனால் பார்வையாளர்கள் இன்றி சரிவில் இருந்த தூர்தர்சன் சேனல் அதிரடியாக எழுந்தது. கடந்த ஏப்ரல் 16ம் தேதியுடன் ராமாயணம் 7.7 கோடி பார்வையாளர்களை கடந்து பழைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராமாயணம் தொடர் குழு:
ராமாயணம் தொடரில் சீதா தேவியாக நடித்த தீபிகா சிக்லியா, கடந்த மாதம் ராமாயணத்தில் நடித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றி, அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது ராமாயணம் தொடர் மறுஒளிபரப்பு முடிந்துள்ள நிலையில் பார்வையாளர்கள் 46% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |