தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு..!

0
corona virus cases
corona virus cases

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் தொடர்ந்து 9வது முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் இரட்டிப்பாகி உள்ளது கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையை காட்டுகிறது. இன்று கொரோனவால் உயிரிழந்தவர்களின் ஒருவர் 22 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் இதுவரை 33,229 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 286 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று 528 பேர் குணமடைந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1149 பேர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை திருவள்ளூரில் 1,386 பேருக்கும், செங்கல்பட்டில் 1,988 பேருக்கும், கடலூரில் 491 பேருக்கும், திருவண்ணாமலையில் 503 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 534 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here