தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் ஆதரவு அளிப்பதும் விதமாக பல அறிவிப்புகளை செய்துள்ளார், முதல்வர் பழனிசாமி.
இன்றைய நிகழ்வு:
இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 200 கோடிக்கும் மேற்பட்ட திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினர். மேலும், முடிவுற்ற 30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 20 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், சிறு, குறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதல்வர் உரை:
பின், உரை நிகழ்த்திய முதல்வர் கூறியதாவது ” இந்த கொரோனா முடக்க காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் என்றால் அது, தமிழகம் தான். தொழில் தொடங்க வேண்டும் என்றால் உடனடியாக அரசு சார்பில் அனுமதி வழங்கபடுகிறது. தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும்.
திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு!!
இனி நிறுவனங்கள் மூலமாக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இ பாஸ் அரசு சார்பில் வழங்கபடும். தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில், நெகடிவ் என்று வந்தால் தொழிலாளர்கள் தாராளமாக வேலைக்கு செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.