தமிழக சட்டமன்ற தேர்தல் – நாளை பரப்புரையை துவங்கும் முதல்வர் பழனிச்சாமி!!

0

தமிழக முதலமைச்சரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பரப்புரையில் பழனிச்சாமி

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் வித்தியாசமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு கட்சியும் இரண்டாம், மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!

தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பரப்புரையை துவங்கும் பழனிச்சாமி, ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் சித்ராவை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். தொடர்ந்து கங்கவல்லி தொகுதியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும், ஆத்தூர் தொகுதியில் ஜெயசங்கரனை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளார். தொடர்ந்து சேலம் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேச உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இதற்கான ஏற்பாடுகள் தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here