தமிழகத்தில் நடைவுபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெறவிருப்பதால் தற்போது தேர்தல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் பல வசதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பாதுகாப்பு காரணமாக அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். தற்போது அந்த வகையில் தேர்தலை கண்காணிக்க 118 செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.
‘குக் வித் கிறுக்கு’ – கன்னடத்தில் ரீமேக்காகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி!!
தற்போது அதுகுறித்து பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் வருகிற 19ம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கு வசதி அளிக்கும் வகையில் தேர்தல் அன்று சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.