தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி வட கேரளா பகுதி வரை நீடித்ததின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். தொடர்ந்து நாளை  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். சனிக்கிழமை (13-03-2021) முதல் திங்கள் கிழமை (15-03-2021) வரை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை காணப்படும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

மீன் உடலமைப்புடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு – ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரி, சிவகிரி, ஆண்டிபட்டி, குன்னூர், பிளவக்கல், தேவகோட்டை, திருச்சி, ஆழியார் ஆகிய பகுதிகளில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட கேரளா மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here