வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இறக்குமதியில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டால் டெண்டர் அதிரடியாக ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உயர்நீதிமன்றம்:
தமிழகத்தில் தற்போதைய காலங்களில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்து வருகிறது. இதனால் ஒருசில பேர் லாபம் காண்கிறார்கள். ஆனால் பாதிப்படைவது மக்கள் தான். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறி, அதனை தடுப்பதற்கு வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மின் வாரிய பொறியாளர் செல்வராஜ் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது, தமிழக மின் வாரியத்திற்கு ரூ.1,330 கோடி மதிப்பில் நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில் மிக பெரிய ஊழல் நடக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த டெண்டரில் நிலக்கரி டன் ஒன்றுக்கு 13 டாலர் லஞ்சம் வழங்கப்பட்டது என்று கூறினார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!
மேலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் அதிக விளையுடைய நிலக்கரியை இதோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டமிடுகிறது என்றும் வாதாடினார். பின்பு இதுகுறித்து பேசிய நீதிபதி கூறியதாவது, சிலரின் லாபத்திற்காக பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது. மேலும் இறக்குமதியில் முறைகேடு நடந்தது உறுதியானால் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் வருகிற 13ம் தேதிக்குள் இதுதொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை வருகிற 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.