தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மே 31ம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நேற்று முதல்வர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை தொடங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் 29ம் தேதி முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மே 31க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது, கொரோனா பரவலுக்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிவிப்பு மே 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |