T20 உலக கோப்பை தொடரில் 2வது சூப்பர் 4 ஆட்டத்திற்கான பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
2022 T20 உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என கணிக்க முடியவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் மைதானத்தின் பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மெல்போர்ன் மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இங்கு விளையாடிய அணிகளில் சேஸிங் செய்த அணி தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வீரருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா .., உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய வீரர்!!
மேலும் போட்டியின் போது மழை பெய்வதற்கு 75 % வாய்ப்புள்ளதால் போட்டி நிறுத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி எந்த தடையும் இன்று நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த அனைத்து சூழ்நிலைகளையும் தாண்டி எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.