மாநிலம் முழுவதும், தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து மாநில அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பொது விடுமுறை :
தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தற்போது பொதுமக்கள் அனைவரும் இந்த பண்டிகைக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்கி உள்ளது. பண்டிகை நாளை முடிந்ததும், அடுத்த நாளே பணிக்கு திரும்புவது பொதுமக்களுக்கு சிரமமான காரியம் என்பதால், அக்.25ம் தேதியான செவ்வாய்க்கிழமையை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த கோரிக்கையை தற்போது அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ஒடிசா அரசு அக்.25 ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் சூரிய கிரகணம் நிகழ்வதால், மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆண்டின் கடைசி கிரகணம் இது என்பதாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் இது பகுதி கிரகணமாக தெரியும் என்பதாலும் பொது மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஒடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில், தமிழகத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.