மாதக்கணக்கில் கெடாத சுவை மிகுந்த இனிப்பான மாங்காய் ஊறுகாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நீங்கள் குடும்பத்தாருக்கு இதை செய்து கொடுத்து அசத்துங்கள்…
தேவையான பொருட்கள்:
- துருவிய (அல்லது) பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்
- மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
- சர்க்கரை – 1 கப்
- கசகசாத்துள் – 1 ஸ்பூன்
- வறுத்த சீரகம் (எண்ணெய் சேர்க்காமல்) – 2 ஸ்பூன்
- உப்பு – 1 ஸ்பூன்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து, ஒரு அகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் மேலே கட்ட வேண்டும். இதனை வெயிலில் 10 முதல் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். அப்போது இதிலுள்ள சர்க்கரை கரைந்து லேகியம் போன்ற பதத்திற்கு வந்து விடும். அந்த பதம் வந்த உடன் எடுத்து ஒரு ஜாரில் வைத்து பயன்படுத்தலாம்.
மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் ஊறுகாயை பூரி, உப்புமா மற்றும் சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |