கேரளாவைச் சேர்ந்த நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் 72 லட்சம் பலோவ்ர்ஸ் இருந்தும் அதிலிருந்து விலகி உள்ளார். தற்போது அதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரியா வாரியர்:
மலையாளத்தில் 2017ம் ஆண்டு வெளியான ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சியால் ஒரே நாளில் வைரலானவர். அதனால் சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராமில் 72 லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்தனர். இது இந்தியில் பிரபலமாக உள்ள பல நடிகைகளையும் மிஞ்சிய சாதனையாக இருந்தது.
அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் நடித்த ஸ்ரீதேவி பங்களா திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி ஸ்ரீதேவியின் கணவர் வழக்கு தொடர்ந்ததால் அது வெளியாவதில் சிக்கல்கள் நிலவுகிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இருந்து திடிரென பிரியா வாரியர் விலகி உள்ளார்.
பிரியா வாரியர் பற்றி சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு கேலி செய்து வந்துள்ளனர். அவரை மோசமாக திட்டவும் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |