தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதி..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,448
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 84 (0.70%)
  • இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 3,48,174
  • அங்கீகரிக்கப்பட்ட கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை – 63
  • தற்போது கொரோனவால் சிகிச்சை பெறுபவர்கள் – 7,466 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 489 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,895 (39.30%) ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 552 பேருக்கு, செங்கல்பட்டில் 22 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 7,672 பேர்
  • கோவை – 146 பேர்
  • திண்டுக்கல் – 126 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • நெல்லை – 226 பேர்
  • செங்கல்பட்டு – 560 பேர்
  • நாமக்கல் – 77 பேர்
  • திருச்சி – 68 பேர்
  • திருவள்ளூர் – 571 பேர்
  • மதுரை – 163 பேர்
  • தேனி – 89 பேர்
  • விழுப்புரம் – 311 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here