நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு மும்பை போலீசாரிடம் கேட்டுக் கொண்டது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சரியானது என்றும், இந்த வழக்கை விசாரிக்க சிபிஐயைக் கேட்க பீகார் அரசு தகுதி வாய்ந்தது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை??
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 34, ஜூன் 14 அன்று தனது மும்பை குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ அறிக்கை தெரிவித்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் மேனேஜர் தெரிவித்தார். மேலும் இது தற்கொலை என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளதுடன், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒரு மாதத்திற்கும் மேலாக, அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தியும் அவரது குடும்பத்தினரும் தனது மகனை பண ரீதியாக மோசடி செய்ததாகவும், அவரை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் பீகாரில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெள்ள நிவாரண உதவியாக ரூபாய் 1 கோடி வழங்கிய நடிகர் அக்ஷய் குமார் – நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட்!!
நடிகை ரியா சக்ரவர்த்தி பாட்னாவில் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தார். 28 வயதான நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என்று அவர் மறுத்துள்ளார்.