‘அனிருத்,கீர்த்தி சுரேஷ் இடையே காதல் கிடையாது’ – கடுப்பான கீர்த்தியின் அப்பா!!

0

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இடையில் காதல் இருப்பதாக சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவிவந்ததை அடுத்து, கீர்த்தியின் அப்பா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்த காதல் செய்தி வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இந்த செய்திக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் தனது படங்களுக்கான இசையமைப்பில் பிசியாக இருக்கிறார். அனிருத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய இமேஜ் இருந்தாலும் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம் தான்.

விநாயகர் டாலருடன் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரிஹானா – போலீசில் பரபரப்பு புகார்!!

பீப் பாடல் விவகாரம், நடிகை ஆண்ட்ரியாவுடனான காதல் விவகாரம் என இவரைச்சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை வந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேசுடன் அனிருத் காதல் என்ற புரளி கிளம்பியுள்ளது. இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பிலிருந்து எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கீர்த்தியின் தந்தை சுரேஷ் தற்போது பதிலளித்துள்ளார்.

அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இடையே காதல் என்று எதுவும் இல்லை. வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என் கூறியுள்ளார் கீர்த்தியின் தந்தை. நடந்து முடிந்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத் தான் ஒரு சிங்கிள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here