விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கிய லட்சுமியும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது கோபியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் உறவினர்கள் என்ற உண்மையும் தெரியவருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்து தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ராதிகாவுக்கு பாக்கிய லட்சுமி குடும்பத்தை பற்றி தெரிய வருமா?? கோபி தான் அவரது கணவர் என்று தெரியவருமா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஜனார்த்தனன் ஒரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இடத்தை வளைத்து போட பார்க்கிறார். ராதிகா இந்த இடத்தை யாருக்கு விற்க போகிறார். ஜனார்தனனுக்கா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. கோபியை மூர்த்தி வீட்டிற்கு அழைத்து வர அங்கு பாக்கியாவும், இனியாவும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
பாக்கியாவிற்கு இது நம் உறவினர்கள் குடும்பம் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷமாகிறது. தனது மாமனாருக்கு கால் செய்து நடந்த விஷயத்தை சொல்ல மேலும் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் இது பாக்கியாவின் அத்தைக்கு பிடிக்கவில்லை.
‘அனிருத்,கீர்த்தி சுரேஷ் இடையே காதல் கிடையாது’ – கடுப்பான கீர்த்தியின் அப்பா!!
அங்கு ஜெனி, செழியன் என அனைவரும் இருக்க இதனை கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர். அடுத்ததாக கோபி தான் கிளம்புவதாக சொல்ல மூர்த்தி அவரை இங்கேயே தங்க சொல்லுகிறார். ஆனால் இதனை மறுக்கும் கோபி ஹோட்டலில் ராதிகா இருப்பதை நினைத்து பார்க்கிறார்.
பாக்கியா மற்றும் இனியாவை மட்டும் இங்கே தங்க சொல்லுகிறார் கோபி. மேலும் ராதிகாவிடம் தான் வந்து கொண்டிருப்பதாகவும் மெசேஜ் அனுப்பிக்கிறார். கிளம்பும் நேரத்தில் சரியாக கதிரும் ஜீவாவும் வருகின்றனர். கோபியை அழைத்து தம்பிகளுக்கு அறிமுகப்படுத்துகிறார் மூர்த்தி.
ஒரு பக்கம் ராதிகாவை சந்திக்கும் அவசரத்தில் இருக்கிறார். அடுத்ததாக கண்ணனை கோபியிடம் தங்க அனுப்பி வைக்கின்றனர். கோபி எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. மேலும் குடும்பத்தாருடன் பாக்கியவும், இனியாவும் பேசிகொண்டுள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.