கொரோனவால் ஒத்திவைக்கப்படும் நீட் தேர்வுகள்..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!

0

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கட்டாயம் நீட்..!

மருத்துவ படிப்பில் சேர்வதற்க்காக நடத்தப்படும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு மாணவனின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது.

தமிழக்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ், 12ம் வகுப்பிற்கு மறுதேர்வு – முதலமைச்சர் உத்தரவு..!

நீட் தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழக அரசு புதிய சட்டம்..!

தற்போது இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் பூட்டப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. இதனால் மருத்துவர் ஆக வேண்டும் என்ற பல மாணவர்களின் கனவு பலிக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே மே மாதம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு உள்ள நீட் நுழைவுத் தேர்வினை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here