Home Uncategorized தமிழக்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ், 12ம் வகுப்பிற்கு மறுதேர்வு – முதலமைச்சர் உத்தரவு..!

தமிழக்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ், 12ம் வகுப்பிற்கு மறுதேர்வு – முதலமைச்சர் உத்தரவு..!

0
தமிழக்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ், 12ம் வகுப்பிற்கு மறுதேர்வு – முதலமைச்சர் உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிற்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிற்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று தேர்வு எழுதாமல் தவறவிட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here