அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், அதை தடுப்பதற்காக நாளை ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பலி எண்ணிக்கை உயர்வு:
உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் இது வரை 4,22,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரசால் இது வரை 18,887 பேர் பலியாகிவிட்டனர், மேலும் இந்தியாவில் மட்டும் இதுவரை 11 பேர் பலி ஆகி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க போர்க்கள அடிப்படையில் உலக நாடுகள் பாதுகாப்பை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொரோனா பரவுதலை தடுப்பது தொடர்பாக உலகளவிய பதிலை முன்னெடுக்க ஜி 20 அசாதாரண மெய்நிகர் தலைவர்களின் உச்சி மாநாடு நாளை நடை பெற உள்ளது.இதில் மொத்தம் 20 நாடுகள் கலந்து கொள்கின்றன.
ஜி 20 மாநாடு:
இந்த கூட்டத்திற்கு சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் அப்துல்அஜிஸ் அல் சவுத் அவர்கள் தலைமையில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மெனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெச்சிக்கோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்க, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமரிக்கா உள்பட 20 நாடுகள் கலந்துகொள்கின்றன. மேலும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |