இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்டு உள்ளன. அங்கு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள் , சந்தித்த நபர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்றுமதிக்கு தடை..!
இதனால் அரசின் விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக கிருமிநாசினிகள், மாஸ்க் மற்றும் சோப்பு பயன்பாடு நாட்டில் அதிகரித்து வருகிறது. மும்பையில் தரமற்ற கிருமிநாசினிகள் தயாரித்து, அவற்றை முறையான அனுமதியின்றி ஏற்றுமதி செய்த நிறுவனத்தை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனாவை அடுத்து வரும் ஹாண்டா வைரஸ் – சீனாவில் ஒருவர் பலி.!
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை ‘கண்டதும் சுட’ உத்தரவு பிறப்பிக்கப்படும் – முதல்வர் எச்சரிக்கை..!
இப்பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் இந்நிலையில் கிருமிநாசினிகள், சுவாச கோளாறு சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகள், செயற்கை சுவாசத்திற்கு தேவைப்படும் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |