![ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை ‘கண்டதும் சுட’ உத்தரவு பிறப்பிக்கப்படும் – முதல்வர் எச்சரிக்கை..! ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை ‘கண்டதும் சுட’ உத்தரவு பிறப்பிக்கப்படும் – முதல்வர் எச்சரிக்கை..!](https://enewz.in/wp-content/uploads/2020/03/cm-768x461.jpg)
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/file79twz9cvr9eegmpw2qn-1585040623.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
தெலுங்கானா முதல்வர் கடும் உத்தரவு..!
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/KCR_latest_IPR.jpg)
எனவே மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |