சினிமா உலகில் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முக கலைஞராக கலக்கி வருபவர் தான் தனுஷ். இப்பொழுது ராயன் படத்தில் நடித்து இயக்கியுள்ள நிலையில் சமீபத்தில் தான் பாடல் வெளியானது. இப்படி திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் தனுஷ் குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அவரும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் இருவருமே சேர்ந்து வாழ முன்வரவில்லை. வரும் அக்டோபர் மாதம் இருவரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டிற்கு வருகிறது.
இப்படி இருக்க கஸ்தூரி ராஜா தனுஷ்ஷிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம். தனுஷிடம் இதனை சொல்ல அவர் வேண்டவே வேணாம் என்று மறுத்து விட்டாராம். இனி குழந்தைகளுக்காகவும் சினிமாவிற்காகவும் தான் வாழ போகிறேன் என்று சொல்லி விட்டாராம்.