நீட் தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழக அரசு புதிய சட்டம்..!

0

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்வழியில் பள்ளியில் படித்து தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் புதிய உத்தரவை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு:

தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு தமிழ் மாணவர்கள் பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் நீட் தேர்வினை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

தமிழ்வழி மாணவர்களுக்கு ஒதுக்கீடு:

இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இது தமிழக அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த உள்ஒதுக்கீடு ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீர்மரபினர் மற்றும் வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த உள்ஒதுக்கீடு சட்டம் குறித்து விதிமுறைகளை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here