கடலில் எல்லையை மீறி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களை தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது. இந்தியவை பழிவாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை:
நாட்டில் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரமால் ஆண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒரு நாட்டவர் மறு நாட்டின் எல்லைக்கும் நுழைந்து விடுகிறார்கள் என்பது. அதிலும் குறிப்பாக இது தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே அதிகமாக இந்த பிரச்னை நடந்து வரும் . தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்கும் நுழைந்துவிட்டால் அவர்களை தாக்குவதோடு கைது செய்து விடுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுபோல் இலங்கை பல பிரச்சனைகளை செய்து வருகிறது. அங்கு மனித உரிமை மீறல்கள் அதிகம் நடந்து வரும். இதனை பல உலக நாடுகள் எதிர்த்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஐநா மனித உரிமைகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
ஆளும் கட்சி என்பதால் பயப்புடுகிறீர்களா?? தேர்தல் ஆணையத்தை விளாசிய நீதிமன்றம்!!
மேலும் இந்தியா போன்ற நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தது. இதனால் இலங்கை அரசு மிக கோபமடைந்து. இந்நிலையில் தற்போது தமிழகம் புதுவையை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லையை மீறியுள்ளதாக கூறி 54 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. ஏற்கனவே ஐநாவின் தீர்மானத்தால் இலங்கை கடும் கோபத்திற்குள்ளாகியது. தற்போது இந்தியாவை பழிவாங்கும் நோக்கில் இலங்கை இதனை செய்கிறது என்று கூறப்படுகிறது.