இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடிரென்று வேகம் எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்ததற்கு காரணம் என்ன என்று தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகமாக பரவி வருகிறது இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முதலியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி பணிகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் கடந்த சில மாதங்களாக நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தற்போது தமிழத்தில் நாள் ஒன்றுக்கு பரிசோதனை செய்யப்படுபவர்களில் 40% பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன்மூலம் தடுப்பூசிக்கு கொரோனாவை விரட்டும் வீரியம் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
ஆளும் கட்சி என்பதால் பயப்புடுகிறீர்களா?? தேர்தல் ஆணையத்தை விளாசிய நீதிமன்றம்!!
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் குறைந்த கொரோனா இந்த ஆண்டு அதிகரித்ததற்கு காரணம் என்ன? அரசியல் தலைவர்களா அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்களா? சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தும் கூட தேர்தல் நேரம் என்பதால் அனைத்து கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். மேலும் சமூக இடைவெளியை அங்கு கடைபிடிப்பதில்லை. இதனை அரசு கட்னுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு மட்டும் தானா, அரசியல் தலைவர்களுக்கு இல்லையா என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.