ஆளும் கட்சி என்பதால் பயப்புடுகிறீர்களா?? தேர்தல் ஆணையத்தை விளாசிய நீதிமன்றம்!!

0

தமிழகம் புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சி வாட்ஸ் ஆப்பில் குரூப் தொடங்கி பிரச்சாரம் செய்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜக:

சட்டமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜக கட்சி மட்டும் இதில் புது வழியை கையாண்டது. அது என்னவென்றால் புதுவையில் பாஜக கட்சி வாட்ஸ் ஆப்பில் குரூப் தொடங்கி பிரச்சாரம் செய்தது. இதுகுறித்து புதுவை ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாக்காளர் பட்டியலில் அவர்களின் போன் நம்பர் இருக்காது. இந்நிலையில் பாஜக வாட்ஸ் ஆப்பில் பிரச்சாரம் செய்வது எப்படி. அவர்கள் ஆதார் மையத்திடம் போன் நம்பர் வாங்கி இதனை செய்கின்றனர். இதனை தடை செய்யவேண்டும் என்று வழக்கு பதிவு செய்தார். தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறியதாவது, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

‘இன்னும் 6 நாள் தான் இருக்கு சீக்கிரமா பண்ணுங்க’ – ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு!!

பின்பு கடுப்பாகிய நீதிபதி, அரசியல் கட்சிக்கு வாக்காளர்களின் போன் நம்பர் தகவல் கிடைத்தது எப்படி. தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் இதுகுறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சி என்பதால் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பயப்படுகிறதா என்று தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியது. மேலும் இதற்கு நாளை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஆளும் கட்சி என்பதால் பயப்புடுகிறீர்களா?? தேர்தல் ஆணையத்தை விளாசிய நீதிமன்றம்!!
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here