சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ரோகிணி அந்த PA வுக்கு பயந்து நடு ரோட்டிலேயே நிற்கிறார். பின் அவரது தோழி அவரை சமாதானப்படுத்தி கோவிலுக்கு அழைத்து செல்கிறார். இந்த பக்கம் ரோகிணி இன்னும் வராததால் விஜயா, மனோஜ் எல்லோரும் பதட்டத்தில் இருக்கின்றன. அப்போது முத்து வழக்கம் போல் இந்த கல்யாணம் நடக்காது என கிண்டலாக பேச விஜயா கோபப்படுகிறார். பின் ரோகிணி வந்துவிட கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது ரோகிணிக்கு அந்த PA கால் பண்ணி வழக்கம் போல் மிரட்டுகிறார். மேலும் உன்னுடைய கல்யாணம் எங்கே நடக்கிறது என்று கேட்க ரோகிணி எங்க ஊரில் நடக்கிறது என்று சொல்ல அந்த PA என்கிட்டையே பொய் சொல்றியா என கல்யாணம் நடக்கும் இடத்தை சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். பின் அவரது தோழி சமாதானப்படுத்துகிறார். ஆனால் அவள் எவ்வளவு சமாதானப்படுத்தியும் ரோகிணி மனோஜிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லப் போவதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.