வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்து கொண்டு வரப்படும் தக்காளி,காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் தக்காளியின் விலை எக்குதப்பாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே 100 ரூபாய் தொட்ட நிலையில் தற்போது மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.110 விலைக்கு நேற்று விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து கிலோ ரூபாய் 140 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சந்தையில் விலையை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் தக்காளியின் விலை இன்னும் விலை அதிகரிக்க சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சில்லரை விற்பனை கடைகளில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.