கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்ல போனால் வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான முதல் கனமான மழை வரை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.