சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து எல்லோரிடமும் கோபமாக நடந்து கொள்வதை பார்த்து ஸ்ருதி தப்பாக புரிந்து கொள்கிறார். மேலும் ரோகிணியிடம் முத்துவின் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்ல. எப்படி மீனா அவங்க கூட சேர்ந்து இருகாங்க என்று ரோகிணியிடம் சொல்கிறார். மேலும் நம்ம தான் மீனாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கணும் என ஸ்ருதி ரோகிணியிடம் சொல்கிறார். உடனே ரோகிணியும் இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என நினைத்துக் கொண்டு முத்து மீனாவை பிரிக்க ஸ்ருதியுடன் கூட்டு சேர்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஸ்ருதி மீனாவிடம் நேரடியாகவே உங்க புருஷன் ஏன் இப்படி இருக்கான். அவங்க பண்ற எல்லா விஷயமுமே காட்டுமிராண்டித்தனமா இருக்கு. எப்படித்தான் அவங்க கூட இருக்கீங்க என்று கேட்கிறார். உடனே மீனா நீங்க அவரோட கோபத்தை மட்டும் தான் பாக்குறீங்க. அவருக்குள்ள இருக்கிற நல்ல மனசு யாருக்குமே முதல்ல தெரியாது. நீங்க போகப் போக முத்துவை பத்தி புரிஞ்சிக்குவீங்க என ஸ்ருதியின் கேள்விக்கு பதில் சொல்வாராம்.