மாறி மாறி குத்தம் சொல்லாம இத தான் செய்யணும்.., அதிரடியாக பேசிய நடிகர் கமல்ஹாசன்!!!

0
சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்பால் பலரும் உணவு, தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதனால் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான வாகனங்களை கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அனுப்பி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.
எதிர்பார்த்ததை விட பாதிப்பு அதிகமாகவே உள்ளது. எனவே இதை வைத்து அரசை விமர்சிக்காமல் மக்களுக்காக நாம் தான் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். இது வேலை என்று சொல்லாமல் ஒவ்வொருவரின் கடமையாக பார்க்க வேண்டும். மேலும் இதற்கு காரணம் திமுக, அதிமுக ஆட்சி தான் என்று குறை சொல்வதை விட்டுவிட்டு அனைவரும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here