தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், தனது இயல்பான பேட்டிங் ஸ்டைல் மூலம் சொந்த மண் ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் மனம் திறந்து உள்ளார்.
அதில் என்னுடைய மகன் தவறுதலாக எனது கண்ணில் எட்டி உதைத்து விட்டார் என்றும், அதனால் வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கியது என்றார். இந்த பிரச்சனையுடன் இரண்டு ஆண்டுகள் விளையாடினேன். நல்லவேளை இடது கண் நன்றாக வேலை செய்தது என தெரிவித்தார். நான் அறுவை சிகிச்சை செய்ய செல்லும்போது இந்த பிரச்சனையுடன் எப்படி கிரிக்கெட் விளையாடினார்கள் என மருத்துவர் ஆச்சரியப்பட்டார் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.