தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் PU விரிவுரையாளர் பணி வழங்கப்படாமல் போட்டி தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை எந்தத் தேர்வும் இன்றி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் போது, PU விரிவுரையாளர் பதவி உயர்வுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடாது. இந்த துறையில் அனைத்து பதவி உயர்வுக்கும் ஒரே மாதிரியான விதிகள் அமைக்க வேண்டும்.” மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.