கோலிவுட் திரையில் ரசிகர்களில் மனம் கவர்ந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமி என்பவருக்கு 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக சொல்லி அவரிடம் இருந்து 14 லட்சம் ரூபாயை முன் பணமாக வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் சொல்லியபடி 15 கோடி ரூபாய் கடனாக வாங்கி தரவில்லை மேலும் முனுசாமியிடம் இருந்து வாங்கிய 14 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பவர் ஸ்டார் மீது முனியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு பலமுறை ராமநாதன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகவில்லை. இதன் பின்னர் முனியசாமியின் 14 லட்சத்துக்கு பவர்ஸ்டார் கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதையடுத்து பவர் ஸ்டார் முனியசாமி போன்று இன்னும் பலரை பண விஷயத்தில் மோசடி செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை உடனடியாக கைது செய்யும்படி நீதிமன்றம் பிடிவாரன் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மக்களே ஓர் குட் நியூஸ்., இந்த அத்தியாவசிய பொருளின் விலை 5% குறையும்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!