கடந்த 10 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சொதப்பி வருகின்றன. இதன் விளைவாக பிசிசிஐ நிர்வாகம் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐசிசி T20 உலக கோப்பை தொடருக்கு, இந்திய அணியில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அதன்படி நம்பர் 3ல் அதிரடியாக விளையாட இஷான் கிஷனை பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் T20 உலக கோப்பையில் விராட் கோலி இடம்பெற வாய்ப்பு இல்லை. எனவே இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, கருத்துக்கள் எழுகின்றன. ஏதுவாக இருந்தாலும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.