சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டுக்கு வந்தது பிடிக்காத விஜயா தொடர்ந்து அவரை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் மீனா வீட்டில் உள்ள எல்லோருக்கும் பூரி சமைக்கிறார். இதை பார்த்த விஜயாவும், ரோகிணியும் இப்பதான் மாமா சரியாகி வீட்டுக்கு வந்திருக்கிறார். அது உனக்கு பொறுக்கலையா?? பூரி சாப்பிட்டால் அவருக்கு உடம்பு இன்னும் சரியில்லாமல் தான் போகும் என ரோகிணி சத்தம் போடுகிறார்.
விஜயாவும் நீ எதுக்கு இதெல்லாம் செய்ற என சத்தம் போடுகிறார். உடனே மீனா நான் மாமாவுக்கு கஞ்சி செஞ்சு வச்சிருக்கேன். என் புருஷனுக்கு பூரி பிடிக்கும்னு தான் அத செஞ்சேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் முத்துவர எனக்கு பூரி பிடிக்காது என்கிறார். பின் முத்து மீனா டிரஸ் எடுக்க கிளம்புகின்றனர். அப்போதும் முத்து மீனாவை தனியாக போக சொல்கிறார். ஆனால் மீனா அண்ணாமலையிடம் சொல்லி விடுவேன் என மிரட்ட பின் அவரை கடைக்கு அழைத்து சென்று சேலை வாங்கிக் கொடுக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.