இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இதைத்தொடர்ந்து மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது காற்று மாசுபாடு இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் தீவிரம் எடுப்பதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வரவிருப்பதால் மேலும் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.