வேர்ல்ட் கப் தொடர்பான இன்றைய லீக்காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறி விடும். இப்படி இருக்கையில் இந்திய அணியின் முந்தைய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ரூல்டு அவுட் ஆனார். இதனால் அவருக்கு பதில் இன்றைய ஆட்டத்தில் யார் களமிறங்குவார் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு இன்னும் நீங்க APPLY பண்ணலயா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத இடத்தில் அக்சர் பட்டேலுக்கு தான் அணியில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்த போதும் ஏன் அணியில் எடுக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அணியில் ஐந்து பவுலர்கள் தரமாக உள்ளனர். எனவே வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதால் தான் கிருஷ்ணாவை தேர்வு செய்தோம் என ராகுல் டிராவிட் விளக்கம் கொடுத்துள்ளார்.