துபாய் ஓபனுடன் சானியா மிர்சா ஓய்வு பெற திட்டமா?? வெளியான அப்டேட்!!

0
துபாய் ஓபனுடன் சானியா மிர்சா ஓய்வு பெற திட்டமா?? வெளியான அப்டேட்!!
துபாய் ஓபனுடன் சானியா மிர்சா ஓய்வு பெற திட்டமா?? வெளியான அப்டேட்!!

இந்தியாவின் டென்னிஸின் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா, தனது ஓய்வு குறித்த தகவல் வெளியிட்டுள்ளார்.

சானியா மிர்சா:

2023ம் ஆண்டின் முதல் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்சா, கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கு பெற உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரில் விளையாடிய பிறகு சானியா மிர்சா, பிப்ரவரி மாதத்தில், துபாயில் நடைபெற உள்ள ஓபன் டென்னிஸ் தொடரிலும் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர், துபாய் டென்னிஸ் தொடரின் போது ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக யு எஸ் ஓபனில் பங்கு பெற தவறினார்.

ரஞ்சி டிராபி: மும்பைக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழ்நாடு அணி!!

காயம் காரணமாக நான் எனது ஓய்வினை அறிவிக்க விருப்பமில்லை. விளையாடும் போது தான் என் ஓய்வு பற்றி அறிவிக்க வேண்டும் என்று எண்ணினேன் என சானியா மிர்சா பெண்கள் டென்னிஸ் சங்கத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை 2 முறை இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்த முறையும் வெற்றி உடன் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here